Breaking News
recent

மருத்துவம் சம்மந்தமான சந்தேகங்களுக்கு டாக்டரிடம் கேளுங்கள்!

மருத்துவம் சம்மந்தமான உங்கள் கேள்விகளுக்கு அக்குபங்சர் டாக்டர் மு. அபூ முஹம்மத் MD HHA அவர்கள் பதில் தரவிருக்கிறார்கள்.

உங்கள் கேள்விகளை கருத்துரை( comments) பகுதியில் எமக்கு எழுதி பதிந்தால் அப்பகுதியிலேயே டாக்டர் அவர்கள் பதில் தருவார்கள்!


டாக்டர் மு.அபூ முஹம்மத்MD HHA அவர்களைப்பற்றி....


தொழில்:

மாற்றுமுறை மருத்துவம்


பட்டம்:

அக்குபங்சர் & மாற்றுமுறை மருத்துவத்தில் முதுகலை (உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் பெற்றது)


பட்டயம்:

மூலிகை, ஹோமியோ & அக்குபங்சர் - இந்திய அரசு சான்றிதழ்


அனுபவம்:

இந்தியா, பிரான்ஸ் நாட்டில் இத்துறையில் கைதேர்ந்து,
தற்போது இலண்டன் மாநகரத்தில் "ஆFபியா ஹெல்த் ரெஸார்ட்" என்ற சிகிச்சை நிலையத்தின் நிறுவனராகவும், இயக்குனராகவும் இருந்துவருகிறார்.


அக்குபங்சர் மருத்துவம் (ஊசி முறை சிகிச்சை) பற்றி டாக்டர் மு.அபூ முஹம்மத் MD HHA அவர்கள் கூறும்போது...


நாடிப்பரிசோதனை மூலம் நோய் அறிதல்.
அக்குபங்சர் மருத்துவத்தில் பக்க விளைவு, எதிர் விளைவு மற்றும் தீங்கு இல்லை.
அனைத்து வயதினருக்கும், அனைத்து நோய்களுக்கும் ஏற்ற மென்மையான சிகிச்சை.
Unknown

Unknown

10 கருத்துகள்:

  1. ஆத்தூர் எம்.செல்வம்.சிங்கப்பூர்4 டிசம்பர், 2009 அன்று 11:38 PM

    டாக்டர்...அக்குபங்சர் மருத்துவத்திற்கும் அலேபதி என்ற ஆங்கில மருத்து முறைகும் என்ன வித்தியாசம்?
    ஆத்தூர் எம்.செல்வம்.சிங்கப்பூர்

    பதிலளிநீக்கு
  2. அலோபதி முறை எதிர்மறை மருத்துவம். பக்கவிளைவுகள் என்ற பெயரில் புதிய நோய்களை உருவாக்கும் என்பதை அத்துறையே ஒப்புக்கொண்ட உண்மை. அக்குபங்சர் என்பது உயிர் சக்தியை இயக்கி சமநிலை படுத்துவதன் மூலம் நோய்களை நீக்கும் அற்புத அருள் - மாற்றுமுறை சிகிச்சை.

    பதிலளிநீக்கு
  3. உம்மு ஹாரித்-அதிரை5 டிசம்பர், 2009 அன்று 4:29 PM

    சமீப காலமாக குழந்தை பிறப்பிற்கு ஆப்ரேஷன் செய்யப்படுகிறதே ஏன்; இதனை தடுக்க முடியாதா? மருந்து உட்கொள்வதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? உம்மு ஹாரித்-அதிரை

    பதிலளிநீக்கு
  4. சிசேரியன் என்ற குழந்தைப்பேறு அறுவை சிகிச்சை பல காரணங்களால் ஏற்படுகிறது. முதலில் இயற்கையில் குழந்தையின் position மாறி அமையும் போது பிரசவ நேரத்தில் சிக்கல் எற்படுகிறது. இந்த position-ஐ மாற்றி அமைக்க ஆங்கில வைத்தியத்தில் தீர்வு இல்லாததால் சிசேரியன் நடக்கிறது. Acupuncture & Homeopathy-யில் இதற்கு இறைவன் அருளால் தீர்வு உண்டு. 2வதாக, ஆங்கில மருந்தில் பயன்படுத்தப்படும் ரசாயணக்கலவை கருப்பையில் ஒரு வகையான இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. 3வதாக, குறைந்த மாதத்தில் ஏற்படும் கருக்கலைவு நிலைக்கு காரணம் காணாமல், கருப்பையை இறுகச்செய்யும் மாத்திரைகளை கொடுப்பதன் மூலம் சிசேரியன் ஏற்படுகிறது. மனிதாபிமானமுள்ள பிரசவ டாக்டர்கள் இருக்கும் அதே நேரத்தில், காசு பறிக்கும் இறக்கமற்றவர்கள் இதை சாதாரண கற்பவதிக்கும் பயன் படுத்துவதன் மூலமும், சரியான வலி ஏற்பட்டும், வலியை மறக்கடிக்கும் ஊசிகளை செலுத்தி சிசேரிய னுக்கு வழி ஏற்படுத்துவதும், கொடுமையான நிகழ்வுகள். அடுத்த பிரசவங்களை கடினமாக்கும் சதி.

    பதிலளிநீக்கு
  5. அப்துல் காதர் -மலேசியா10 டிசம்பர், 2009 அன்று 2:04 AM

    டாக்டர் எனக்கு 30 வயது (ஆண்) அடிக்கடி தலைவலி வருகிறது. என்ன காரணம் ?
    அப்துல் காதர் -மலேசியா

    பதிலளிநீக்கு
  6. தலைவலிக்கு இன்னக்காரணம் என்று எதையும் கூற இயலாது. பல காரணங்கள் உண்டு. நபருக்கு நபர் இது மாறுபடும். ஒரு சில காரணங்களை இங்கு கூறுகிறேன். தட்ப-வெட்ப நிலை, கழுத்து வலி, உயர் இரத்த அழுத்தம், கண்ணுக்குக் கொடுக்கப்படும் அதிக பளு, மன அழுத்தம், புகைபிடித்தல், மூலையில் கட்டி, வைரஸ், ஹோர்மோன் (உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று) மாற்றம் பெறுதல், சைனஸ் (நெற்றி எலும்பின் உட்புழை) இன்னும் உணவு பழக்க வழக்கமும் ஆகியன. இதற்கு வலிக்கொள்ளிகளை உயிர்க்கொள்ளிகளாக உட்கொள்வதைவிடுத்து, கைதேர்ந்த மருத்துவக் கலைஞர்களை அணுகி இறைவன் தந்த இயற்கை முறையில் நிவாரணம் பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. sir yanaku kidney stone 10mm iruku sariseiyalama? yevlo naal treatement yedkanum? pls help me?

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாமு அழைக்கும்

    டாக்டர் எனக்கு ஆசன வாயில் கட்டிகள் உள்ளது (நான்கு அல்லது ஐந்து) இது சில நேரம் இருக்கும் பல நேரம் மறைந்து விடுகிறது. இதற்கு என்ன டாக்டர் காரணம்? வயது 30 ஆண்

    பதிலளிநீக்கு
  9. sir, enakku aasana vayil kattikal avvapthu thonruthu varum pala nerangalil marainthu vidum. intharku enna kaaranam DR. Please Tell me What is the reason?


    Thank U Sir

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.