Breaking News
recent

பட்ஜெட் 2010-11: முக்கிய அம்சங்கள்

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

-ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிப்பு

-ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்

-கூடுதலாக பல சேவைகளுக்கும் வரிகள் விதிக்கப்படும்

-விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு

(பட்ஜெட்டுக்கு இந்திய பங்குச் சந்தையில் வரவேற்பு, பங்கு விலைகள் உயர்வு)

-டிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலையும் உயருகிறது

-தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.

-மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து

-சிடி விலை குறையும்

-பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீணடும் 5 சதவீத கலால் வரி

-இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 கிராமுக்கு ரூ. 300 சுங்க வரி விதிக்கப்படும். இதனால் தங்க நகை விலை உயரும்.

-அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்

-பெட்ரோல், டீசல் விலை உயரும்

-பெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு

-(பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரியை கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு)

--பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு (இதனால் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும். இதை கண்டித்து எதி்ர்க் கட்சிகள் அமளி)

-கலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு

-கார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு

-சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு

-இந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்

-நீண்டகால அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ. 20,000 முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்கும்

-இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.

-ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்

-ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)

-ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்

-ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்

-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு

-உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்

-பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

-ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி

-இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது

-திட்ட செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது

-மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்

-பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி
-------------------------------
நன்றி-ThatsTamil 
மஸ்தூக்கா

மஸ்தூக்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.