From: Adirai Ahmad
Date: 2010/3/13
Subject: Re: அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்
To: Adhirai Farook
அன்புச்சகோதரருக்கு,
அஸ்ஸலாமுஅலைக்கும்.
உங்களின் அறிவிக்கை கண்டேன். த த ஜ வின் செயல்பாடுகள் பற்றி எனக்கு அத்துணைப் பிடிப்பில்லை. காரணங்கள் பல. 1980களின் இறுதியில் தவ்ஹீத் நமதூருக்கு அறிமுகமாயிற்று. 1988ல் முதன்முதலாகப் பீஜே மீட்டிங்கைப் பல எதிர்ப்புகளுக்கிடையில் நடத்திக் காட்டினோம்.
அது முதல் ஊரில் தவ்ஹீத் வளர்ந்து வந்தது. அதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. அதாவது, தவ்ஹீதின் செயல்பாட்டோடு கூடிய வாழ்க்கையை நம் சகோதரர்களுள் பலர் சஊதியில் பழகியது, ஊரில் செயல்படுத்துவதற்கு இலகுவாக இருந்ததே. இதற்கிடையில், நம் தமிழ் நாட்டுத் தவ்ஹீதில், ஈகோ பிரச்சினையினால், ஒன்று இரண்டாகி, இரண்டு பலவாகி உடைந்து சிதறியபோது, நாங்கள் வருந்தினோம்.
அன்றிலிருந்து விரல்விட்டு எண்ணத் தக்க சிலர் தவ்ஹீது அமைப்புகளின் ஒன்றிணைப்புக்காக - ஒற்றுமைக்காகப் பாடுபட்டோம். விளைவு, நானா நீயா என்ற ஈகோ தலைவர்களிடம் இருந்ததால், இணைப்புக்கே வாய்ப்பில்லாமல் போயிற்று. இன்னும் கதை நீளும். வேண்டாம்.
நமதூர் நிலைபாட்டுக்கு வருவோம்: அண்மைவரை, சாத்தியமான ஏதேனும் சிலவற்றிலாவது நமது ஒற்றுமையைக் காட்டுவோம் என்ற முயற்சியில் இறங்கி, நமதூரில் அமைக்கப்பெற்ற ஈத் கமிட்டி சார்பாகச் சிலர் த த ஜ சகோதரர்களிடம் சென்று, "நாம் ஒன்றாக ஈத் தொழுகையைத் தொழுவோம். உங்கள் இமாமே தொழுகை நடத்தட்டும். வசூல்கூட நீங்களே செய்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், த த ஜ என்ற பேனர் மட்டும் வேண்டாம்" என்றோம்.
ஆனால், இயக்க வெறியால் அவர்கள் மேலிடத்தின் கடுமையான உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, 'முடியாது' என்று மறுத்துவிட்டார்கள். நாங்கள் அத்துடன் நிற்கவில்லை. மிக அண்மையில், நமதூர் தரகர் தெருப் பள்ளியின் சமுதாயக் கூடத்தில் ஓர் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, 'அவர்களை' மீண்டும் அழைத்தோம். "எங்கள் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அந்தத் தேதியில் இருக்கிறது" என்று நழுவப் பார்த்தார்கள். "சரி, உங்கள் வசதிப்படி ஒரு தேதியில் வைக்கலாம் வாருங்கள்" என்றோம். "பார்க்கலாம்" என்றவர்கள், பார்க்கவேயில்லை!
கூட்டம் நடந்தது, அவர்கள் மட்டும் இல்லாமல். அவர்களும் வந்திருந்தால், தவ்ஹீதின் பலம் கூடியிருக்கும்; நமது திட்டங்களை மக்கள் முன் வைக்க இலகுவாயிருந்திருக்கும். ஆனால், சென்னையின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் செயல்படும் த த ஜவினர் - கடைசி நிமிடம்வரை எதிர்பார்க்கப்பட்டும் - 'நாங்கள் நாங்கள்தான்; நீங்கள் நீங்கள்தான்' என்று வேறுபாட்டைக் கூறி, ஒற்றுமைக்கு வரவில்லை என்ற உண்மை மிகப் பலருக்குத் தெரியும்.
அத்துடன், அவர்களின் முறட்டுத் தனமான - சஹாபாக்களையும், நம் உயிருக்கும் மேலான நபியவர்களையும்கூடக் குறைவு படுத்தும் விதமான சொற்பொழிவுகளால், தங்களின் 'முஉத்தஸிலா'க் கொள்கைகளுக்கு உரம் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில், தங்களைத் தவிர மற்ற தவ்ஹீத்வாதிகளைப் 'போலிகள்' என்கின்றனர்! வேடிக்கை.
அல்லாஹ் போதுமானவன். எழுத வேண்டியவை ஏராளம் உள்ளன. இடம் போதாது என்பதால், இத்துடன் விடுகிறேன். வஸ்ஸலாம். அன்புடன், அதிரை அஹ்மது
அஸ்ஸலாமுஅலைக்கும்.
உங்களின் அறிவிக்கை கண்டேன். த த ஜ வின் செயல்பாடுகள் பற்றி எனக்கு அத்துணைப் பிடிப்பில்லை. காரணங்கள் பல. 1980களின் இறுதியில் தவ்ஹீத் நமதூருக்கு அறிமுகமாயிற்று. 1988ல் முதன்முதலாகப் பீஜே மீட்டிங்கைப் பல எதிர்ப்புகளுக்கிடையில் நடத்திக் காட்டினோம்.
அது முதல் ஊரில் தவ்ஹீத் வளர்ந்து வந்தது. அதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. அதாவது, தவ்ஹீதின் செயல்பாட்டோடு கூடிய வாழ்க்கையை நம் சகோதரர்களுள் பலர் சஊதியில் பழகியது, ஊரில் செயல்படுத்துவதற்கு இலகுவாக இருந்ததே. இதற்கிடையில், நம் தமிழ் நாட்டுத் தவ்ஹீதில், ஈகோ பிரச்சினையினால், ஒன்று இரண்டாகி, இரண்டு பலவாகி உடைந்து சிதறியபோது, நாங்கள் வருந்தினோம்.
அன்றிலிருந்து விரல்விட்டு எண்ணத் தக்க சிலர் தவ்ஹீது அமைப்புகளின் ஒன்றிணைப்புக்காக - ஒற்றுமைக்காகப் பாடுபட்டோம். விளைவு, நானா நீயா என்ற ஈகோ தலைவர்களிடம் இருந்ததால், இணைப்புக்கே வாய்ப்பில்லாமல் போயிற்று. இன்னும் கதை நீளும். வேண்டாம்.
நமதூர் நிலைபாட்டுக்கு வருவோம்: அண்மைவரை, சாத்தியமான ஏதேனும் சிலவற்றிலாவது நமது ஒற்றுமையைக் காட்டுவோம் என்ற முயற்சியில் இறங்கி, நமதூரில் அமைக்கப்பெற்ற ஈத் கமிட்டி சார்பாகச் சிலர் த த ஜ சகோதரர்களிடம் சென்று, "நாம் ஒன்றாக ஈத் தொழுகையைத் தொழுவோம். உங்கள் இமாமே தொழுகை நடத்தட்டும். வசூல்கூட நீங்களே செய்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், த த ஜ என்ற பேனர் மட்டும் வேண்டாம்" என்றோம்.
ஆனால், இயக்க வெறியால் அவர்கள் மேலிடத்தின் கடுமையான உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, 'முடியாது' என்று மறுத்துவிட்டார்கள். நாங்கள் அத்துடன் நிற்கவில்லை. மிக அண்மையில், நமதூர் தரகர் தெருப் பள்ளியின் சமுதாயக் கூடத்தில் ஓர் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, 'அவர்களை' மீண்டும் அழைத்தோம். "எங்கள் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அந்தத் தேதியில் இருக்கிறது" என்று நழுவப் பார்த்தார்கள். "சரி, உங்கள் வசதிப்படி ஒரு தேதியில் வைக்கலாம் வாருங்கள்" என்றோம். "பார்க்கலாம்" என்றவர்கள், பார்க்கவேயில்லை!
கூட்டம் நடந்தது, அவர்கள் மட்டும் இல்லாமல். அவர்களும் வந்திருந்தால், தவ்ஹீதின் பலம் கூடியிருக்கும்; நமது திட்டங்களை மக்கள் முன் வைக்க இலகுவாயிருந்திருக்கும். ஆனால், சென்னையின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் செயல்படும் த த ஜவினர் - கடைசி நிமிடம்வரை எதிர்பார்க்கப்பட்டும் - 'நாங்கள் நாங்கள்தான்; நீங்கள் நீங்கள்தான்' என்று வேறுபாட்டைக் கூறி, ஒற்றுமைக்கு வரவில்லை என்ற உண்மை மிகப் பலருக்குத் தெரியும்.
அத்துடன், அவர்களின் முறட்டுத் தனமான - சஹாபாக்களையும், நம் உயிருக்கும் மேலான நபியவர்களையும்கூடக் குறைவு படுத்தும் விதமான சொற்பொழிவுகளால், தங்களின் 'முஉத்தஸிலா'க் கொள்கைகளுக்கு உரம் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில், தங்களைத் தவிர மற்ற தவ்ஹீத்வாதிகளைப் 'போலிகள்' என்கின்றனர்! வேடிக்கை.
அல்லாஹ் போதுமானவன். எழுத வேண்டியவை ஏராளம் உள்ளன. இடம் போதாது என்பதால், இத்துடன் விடுகிறேன். வஸ்ஸலாம். அன்புடன், அதிரை அஹ்மது
2010/3/13 Adhirai Farook
ஏகஇறைவனின் திருப்பெரால்...
அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....தஞ்சை (தெற்கு) மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் தொடங்;கப்பட்ட காலத்திலிருந்து நீண்டகாலமாக பள்ளிவாசல் கட்டப்படாமலேயே ஏனைய பள்ளிவாசல்களில் தவ்ஹீது சகோதரர்கள் தொழுது வந்தனர்.
இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிட்டது எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் சகித்துக் கொள்வோம் என்ற சிந்தனையில் தனிப் பள்ளிவாசல் அமைக்கப்படாமல் தொழுது வந்தனர். ஆனாலும் அதிகபமட்சமான மக்களின் உள்ளங்களில் தனிப் பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்ற சிந்தனை நாளுக்கு நாள் மேலோங்கியதால் அதனடிப்படையில் நிலம் வாங்கப்பட்டு அதில் கீற்றுக் கொட்டகை அமைத்து தொழுகை நடந்து வருகிறது.
பள்ளிவாசல் அமையப்பெற்ற இடம் நுஊசு ரோடு என்பதால் பலமானக் காற்றுக்கு அதன் கீற்றுகள் தாக்குப்பிடிக்க முடியாததால் அடிக்கடி கீற்று மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது இதில் கனிசமானத் தொகை செலவாகின்றது. கடந்த வருடம் கீற்று மாற்றும் முழு செலவையும் இப்போதைய மாவட்டத் தலைவர் சகோ: ஒய்.அன்வர் அலி அவர்களே ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த வருடத்து நிலை என்ன வென்றுத் தெரியவில்லை.இதற்கடுத்து பள்ளவாசலில் ஜூம்ஆத்தொழுகை;காக மக்கள் கூட்டம் வாரத்திற்கு வாரம் கூடிக்கொண்டே செல்வதால் கடும் வெயிளியில் பள்ளிவாசலுக்கு வெளியில் தொழுவதால் உடனடியாகப் பள்ளிவாசலை கட்டிடமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களையும் கீழ்காணும் லிங்கை சொடுக்கிப்பார்வையிடவும். http://adirai-tntj.blogspot.com/p/blog-page.html
அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....தஞ்சை (தெற்கு) மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் தொடங்;கப்பட்ட காலத்திலிருந்து நீண்டகாலமாக பள்ளிவாசல் கட்டப்படாமலேயே ஏனைய பள்ளிவாசல்களில் தவ்ஹீது சகோதரர்கள் தொழுது வந்தனர்.
இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிட்டது எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் சகித்துக் கொள்வோம் என்ற சிந்தனையில் தனிப் பள்ளிவாசல் அமைக்கப்படாமல் தொழுது வந்தனர். ஆனாலும் அதிகபமட்சமான மக்களின் உள்ளங்களில் தனிப் பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்ற சிந்தனை நாளுக்கு நாள் மேலோங்கியதால் அதனடிப்படையில் நிலம் வாங்கப்பட்டு அதில் கீற்றுக் கொட்டகை அமைத்து தொழுகை நடந்து வருகிறது.
பள்ளிவாசல் அமையப்பெற்ற இடம் நுஊசு ரோடு என்பதால் பலமானக் காற்றுக்கு அதன் கீற்றுகள் தாக்குப்பிடிக்க முடியாததால் அடிக்கடி கீற்று மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது இதில் கனிசமானத் தொகை செலவாகின்றது. கடந்த வருடம் கீற்று மாற்றும் முழு செலவையும் இப்போதைய மாவட்டத் தலைவர் சகோ: ஒய்.அன்வர் அலி அவர்களே ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த வருடத்து நிலை என்ன வென்றுத் தெரியவில்லை.இதற்கடுத்து பள்ளவாசலில் ஜூம்ஆத்தொழுகை;காக மக்கள் கூட்டம் வாரத்திற்கு வாரம் கூடிக்கொண்டே செல்வதால் கடும் வெயிளியில் பள்ளிவாசலுக்கு வெளியில் தொழுவதால் உடனடியாகப் பள்ளிவாசலை கட்டிடமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களையும் கீழ்காணும் லிங்கை சொடுக்கிப்பார்வையிடவும். http://adirai-tntj.blogspot.com/p/blog-page.html
அல்லாஹ்வின் பள்ளிவாசலை அமைப்பதற்கு இறையச்சமுடையவர்கள் தாராளமாகப் பொருளாதார உதவி செய்ய முன்வருவதன் மூலம் இறையருளுக்கு நெருக்கமானவர்களாகவும், சுவனத்தில் தங்;கள் இருப்பிடத்தை இங்கிருந்தே அமைத்துக் கொள்ளும் பாக்கியம் பொருந்தியவர்களாகவும் ஆவார்கள்.

யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் அது போன்ற (கட்டிடத்) தை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி)திர்மிதி 292

யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் அது போன்ற (கட்டிடத்) தை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி)திர்மிதி 292
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
பதிலளிநீக்குஅதிரை ததஜ பள்ளி என தம்பட்டமடிக்கும் ஆள்களுக்கு முதலில் இந்த பள்ளியே சொந்தமில்லையாம் அமுக்கி கொண்டு வங்கித் தந்தவர்களை வழக்கம்போல் சீனுக்கே கொhண்டு வரவில்லை இந்த பள்ளி கொள்ளை கும்பல் என இப்போது தான் கசியத் தொடங்கியுள்ளது முதலைகள நம்பி மோசம்போனவர்கள் தான் இதுக்கு விளெக்கஞ் சொல்லோனும்
சிட்டிசன் - அதிரை
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
பதிலளிநீக்குஅதிரை ததஜ பள்ளி என தம்பட்டமடிக்கும் ஆள்களுக்கு முதலில் இந்த பள்ளியே சொந்தமில்லையாம் அமுக்கி கொண்டு வங்கித் தந்தவர்களை வழக்கம்போல் சீனுக்கே கொhண்டு வரவில்லை இந்த பள்ளி கொள்ளை கும்பல் என இப்போது தான் கசியத் தொடங்கியுள்ளது முதலைகள நம்பி மோசம்போனவர்கள் தான் இதுக்கு விளெக்கஞ் சொல்லோனும்
சிட்டிசன் - அதிரை
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
பதிலளிநீக்குஅதிரை ததஜ பள்ளி என தம்பட்டமடிக்கும் ஆள்களுக்கு முதலில் இந்த பள்ளியே சொந்தமில்லையாம் அமுக்கி கொண்டு வங்கித் தந்தவர்களை வழக்கம்போல் சீனுக்கே கொhண்டு வரவில்லை இந்த பள்ளி கொள்ளை கும்பல் என இப்போது தான் கசியத் தொடங்கியுள்ளது முதலைகள நம்பி மோசம்போனவர்கள் தான் இதுக்கு விளெக்கஞ் சொல்லோனும்
சிட்டிசன் - அதிரை