Breaking News
recent

அதிராம்பட்டினம் அருகே சங்பரிவார் கலவர வெறியாட்டம்! அதிரையில் ஆர்ப்பாட்டம்!! (படம் இணைப்பு)

கடந்த பிப்ரவரி மாதம் அதிராம்பட்டினம் அருகே இந்து முன்னணியினர் கலவர வெறியாட்டம்!முஸ்லிம் மாணவன் சீரியஸ்!! என்ற தலைப்பில் புதுப்பட்டனத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை பதிவு செய்திருந்தோம்!


நேற்றும்(22/09/2011) அதே புதுப்பட்டினத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் பெரும் கலவரம் வெடித்தது.  இதனை கண்டித்து இன்று(23/09/2011)அதிரையில் ஜும்மா தொழுகைக்கு பின் (கட்டப்படாத) பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் கண்டன உரையும் நடந்தது.
முன்னதாக துலுக்கா(தக்வா)பள்ளியிலிருந்து பேரணியாக சென்றனர்.


இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கார் அவர்கள் புதுப்பட்டினம் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் சேகரித்த செய்திகள் சமுதாய மக்கள் ரிப்போர்டர் வார இதழில் வெளியாகும்!













Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. புதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக

    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
    நாம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக ஆமீன்.

    புதுப்பட்டினத்தில் (22/09/2011) அன்று நடந்த மதக்கலவரத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தியும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட புதுப்பட்டினம் முஸ்லீம் மக்களுக்காக குரல்கொடுத்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தார்களுக்கு, அதிரை வலைத்தளத்திற்கும் , மற்றும் எண்ணற்ற நல்ல உள்ளம்படைத்த அனைத்து சகோதரர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    எங்கள் ஊர் முஸ்லீம் மக்களுக்காக தங்களது ஒற்றுமையை அல்லாஹ் உதவிக்கொண்டு எவ்வித விருப்பு வெறுப்பு இல்லாமல் காண்பித்த அதிரை மற்றும் அனைத்து ஊர் முஸ்லீம் சகோதரர்களுக்கு மீண்டும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்...!

    இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் இதுபோன்று நாம் ஒற்றுமையாக இருந்தால் நமது சமுதாயத்தை எவராலும் அசைக்கமுடியாது. நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்று அல்லாஹ்வின் உதவியால் இந்திய அரசாங்கத்தில் தனி முத்திரைப்பதித்து இருக்கலாம். பராவயில்லை. எல்லாம் நன்மைக்குத்தான். இன்ஷா அல்லாஹ் அதற்கான கால நேரங்கள் அல்லாஹ்வின் உதவியால் கனிந்து வருகின்றன். வல்ல இறைவனின் உதவியா முயற்சி செய்து வெற்றிப்பெறுவோம். ஆமீன்.

    யா அல்லாஹ்! எனக்கும், எங்கள் ஊர் மக்களும், எங்களின் சமுதாய மக்களும், சமுதாய பிரச்னைகளுக்காக தங்களை அற்பணிக்கும் எண்ணற்ற சகோதரர்களுக்கும் எங்களது பாவங்களை மன்னித்து உனது பேரருளை வழங்குவாயாக. ஆமீன்.

    யா அல்லாஹ்! இனிவரும் காலங்களில் எங்கள் அனைவரையும் அக்கிரமக்காரர்களிடமிருந்தும், அணியாயக்கார்களிடமிருந்தும், சைத்தானின் தீங்கைவிட்டும் பாதுகாத்து என்றும் உனது பாதுகாப்பிலே வைத்திருப்பாயாக. ஆமீன்.

    யா அல்லாஹ்! இனிவரும் காலங்களில் எங்களது ஊரையும், எங்களது சமுதாய மக்களையும், எங்களது நாட்டையும், பொதுப்பணியில் ஈடுபடும் அனைத்து சகோதர்களையும், எண்ணற்ற ஊர்களையும் தீயவர்களிடமிருந்து பாதுகாத்து அமைதியான முறையில் வாழ்வதற்கு உதவி புரிவாயாக ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

    புதுப்பட்டினத்தில் மீண்டும் அமைதிபெற வேண்டும் என அல்லாஹ்விடத்தில் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ். ! இதற்கான கூலியை உங்களுக்கு மறுமையிலே அல்லாஹ் வாரிவளங்குவான்.

    ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!

    வஸ்ஸலாம்...!
    --

    என்றும் அன்புடன்
    இப்படிக்கு

    இனியவன்

    பதிலளிநீக்கு
  2. மிக்க நண்றி. முத்துப்பேட்டை & அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம்
    மற்றும் ஏனைய ஊர் அனைத்து சகோதரர்களுக்கும் புதுப்பட்டினம்
    சார்பாக மனமார்ந்த நன்றியினைதெரிவித்துக் கொள்கிறோம்.

    30/09/2011 அன்று புதுப்பட்டினம் மக்களுக்காக சேதுபாவசத்திரம்
    காவல்நிலையம் முன்பு அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள்
    அனைவரும் ஓன்றுகலந்து அமைதியான முறையில் முற்றுகைப்
    போராட்டம் நடத்தப்போகிறோம். இன்ஷா அல்லாஹ்.

    அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் ஆதரவு கொடுத்து
    கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

    அல்லாஹ் உதவிக்கொண்டு அன்று நாம் காண்பிக்கும்
    மிகப்பெரிய ஒற்றுமையினால் இனிவரும் காலங்களில்
    அக்கிரமக்காரகளிடமும், அநியாயக் காரர்களிடமும் இருந்து
    பாதுகாத்து, அல்லாஹ்வின் பேரருளால் நமக்கு மிகப்பெரிய
    வெற்றியை தருவான். ஆமீன்.

    இன்ஷா அல்லாஹ்! தங்கள் செய்த நன்மையான இந்த காரியத்திற்கு
    கூலியை வல்ல இம்மையிலும், மறுமையிலும் வல்ல இறைவன்
    வாரி வழங்குவான் ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

    அல்லாஹ் அக்பர்! புறப்படுங்கள் புதுப்பட்டினம் நோக்கி!
    அக்கிரமக்காரர்களை அடியோடு அஹிம்சையின் முறையில்
    ஒழித்து அமைதிப்பூங்காவாக மாற்றிடுவோம். இன்ஷா அல்லாஹ்...!

    --

    என்றும் அன்புடன்
    இப்படிக்கு
    இனியவன்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.