Breaking News
recent

19வது வார்டு உறுப்பினர் சகோ சவுதா ஹாஜா அவர்களுக்கு ...

பத்தொன்பதாம் வார்டு உறுப்பினர் சகோதரி சவுதா அவர்களுக்கு(சகோ ஹாஜா)கீழ்கண்ட செய்தியை பாருங்கள்.இதில் எந்த நேரத்தில் ஆபத்து ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.எனவே இந்த மின் கம்பத்தை உடனே அகற்றி ஆவன செய்யும்படி அன்புடன் வேண்டுகிறேன்.


கீழே உள்ள கட்டுரை சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
அதிராம்பட்டினத்தில் உள்ள புதுமனைத்தெரு -செக்கடிக்குளம் வடக்கு கரை பக்கம் உள்ளது நீங்கள் காணும் மின் கம்பம்.அது மிகவும் பழுதடைந்து எந்த நேரமும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.இதை மின்வாரியமோ இதுவரை கண்டு கொள்ளவில்லை.இந்த ஆபத்தான மின் கம்பத்தை உடன் அகற்றவேண்டும்,இல்லையெனில் பொது மக்கள் திரண்டு அரசுக்கும்,மின் வாரியத்துக்கும் எதிரான போராட்டங்களில்  குதிக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே,பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று அதை உடனே மாற்றித்தர வேண்டுகிறோம்.



இதை பொதுமக்கள் மட்டுமின்றி,ஊரில் உள்ள எல்லா இயக்கங்களும்,ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் அரசு மற்றும் மின் வாரிய கவனத்துக்கு கொண்டு சென்று -ஆவன  செய்ய வேண்டும். 
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.