Breaking News
recent

அதிரைபேரூராட்சி நியமனக்குழு,வரிமேல் முறையிட்டுக்குழு தேர்தல் முடிவு:விரிவான செய்தி!காணொளிகள்!!


அதிராம்பட்டினம் பேரூராட்சி நியமனக்குழுமற்றும் வரிமேல் முறையீட்டுக்குழுவிற்கான தேர்தல் திங்கட்கிழமை(21-11-11)நடந்தது.
மொத்த உறுப்பினர்கள் 21 என்ற போதும்ஒரு உறுப்பினர் வெளிநாடு சென்றதால் தேர்தலில் கலந்துக்கொள்ளவில்லை.ஆக,20 உறுப்பினர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர்இந்த தேர்தலில் சேர்மன் வாக்களிக்கமுடியாது.

அதில் நியமனக்குழு பதவிக்கு சுயட்சை உறுப்பினர் இப்ராகிம் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காளிதாஸ் அவர்களும் போட்டியிட்டனர்இருவரும் தலா பத்து வாக்குகள் பெற்று சமநிலை அடைந்தனர்.எனவேகுலுக்கல் முறையில் தேர்வுசெய்ய இருவரின் எழுத்துமூலமான ஒப்புதல் பெற்று,அதிரை பேரூராட்சி நிர்வாக அதிகாரியும் நேற்றைய தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதரன் அவர்கள் முடிவு செய்தார்.அதன் படி குலுக்கல முறையில் இப்ராகீம் தேர்வானார்.

அடுத்து நடந்தவரிமேல்முறையீட்டுகுழு தேர்தலில்,
திமுக சார்பாக 12வது வார்டு செய்யது,14வது வார்டு ஷரீப்,11வது வார்டு உம்மல்மர்ஜான்,20வது வார்டு சித்ரா ஆகியோரும்
அதிமுக சார்பாக 2வது வார்டு உதயகுமார்,8வது வார்டு சாகுல் ஹமீது,10வது வார்டு சப்ருன்நிஷா, 18வது வார்டு அபுதாஹிர் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர்.

இதில்அதிமுக சார்பாக போட்டியிட்ட 8வது வார்டு சாகுல் ஹமீது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்மற்ற 3 உறுப்பினர்களும் தலா 11 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர்.







Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.