Breaking News
recent

தஞ்சை மாவட்ட ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள கலெக்டர் பாஸ்கரன்அழைப்பு!


தஞ்சை மாவட்டம்
கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விபரம்: 
தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை 2012 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும்போது புழக்கத்திலுள்ள ரேஷன் கார்டுகளில் ஆண்டு குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேற்பகுதியில் ""2012'' என முத்திரையிட அரசு உத்தரவிட்டுள்ளது. 

குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை ரேஷன் கார்டுகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். எனவே, ரேஷன் கார்டுகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நீக்கம் காஸ் உருளை விபரம் ஆகிய விபரங்களை வாய்மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் ரேஷன் கார்டு தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து இந்த விபரங்களை பின்னர் தல விசாரணை செய்து ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கும் பணி ஜன.,மற்றும் பிப்., மாதங்களில் நடக்கிறது. எனவே, குடும்ப தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க, புதுப்பிக்க செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான விபரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதும். 

அந்த விவரங்கள் ரேஷன்கார்டு மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியில் வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியில் 2012ம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையெழுத்து, இடது கை பெருவிரல் ரேகை பதிக்க வேண்டும். 

இவ்வாறு கையெழுத்து இட்டால் அல்லது கைரேகை பதிந்தால் தான் ரேஷன் கார்டு புதுப்பிடீக்கும் பணி முடிவுற்றதாக கருதப்படும். ரேஷன் கார்டுகாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விபரங்களை ரேஷன் கடையில் பொருட்கள் பெற செல்லும் போது ரேஷன் கார்டுகாரர்கள் தாங்களே முன்வந்து கேட்கும் தகவலை தெரிவித்து, ரேஷன் கார்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.