Breaking News
recent

முஸ்லிம் லீக் தலைவர் பேசியது தவறா? சலசலப்பில் அதிரை!


அதிராம்பட்டினத்தில் நேற்று 9/05/12 செய்வாய் கிழமை மேலத்தெருவில் இருக்கும், சேக் நஸ்ருதீன் தர்ஹா வளாகத்தில் மீலாத் விழாவும் முகைதீன் ஆண்டகை(?!) விழாவும் நடை பெற்றது.
விழாவில், அதிரையின் எல்லா முஹல்லாவை சேர்ந்தவர்களை அழைத்திருந்தனர்.அனைத்து முஹல்லா கூட்டமைப்பை சேர்ந்தவர்களையும் அழைத்திருந்தனர். அத்துடன் பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச்.அஸ்ஸலம் அவர்களையும் அழைத்திருந்தனர்; அவரும் சென்றார் மேடையில் வீற்றிருந்தார்.

அதிரை நகர முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.கே.ஹாஜா அவர்கள்தான் இவ்விழாவின் தலைவர்! வரவேற்புரை ஆற்றினார். அப்போது, "பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை;அதைவிடவும், அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பதவிதான் உயர்ந்தது" என்று பேசியதாக கூறப்படுகிறது.
 அங்கே மேடையில் வீற்றிருந்த அதிரை பேருராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்கள் தனது அதிர்ப்தியை தெரிவித்தார்.
விழாவில் கலந்துக்கொண்டவர்களும் தங்களது அதிர்ப்தியை காட்டினர்.

விழாவில், சற்று சலசலப்பு ஏற்பட்டது!
கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய இப்பேச்சு அதிரை முழுவதும் பரவியது. "தவறானது,தேவையற்றது" என்கிறார்கள் பொது மக்கள்!

"பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை" என்றால், முஸ்லிம் லீக் சார்பாக அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயட்சை வேட்பாளராக வக்கீல் முனாஃப் அவர்களை களமிறக்கியதே ஏன்? கே.கே.ஹாஜா அவர்கள்தானே களமிறக்கியது... பெரும் பதவி இல்லை என்பதால்தானா? எத்தனையோ பல முஸ்லிம் லீக் கட்சியினர் ஊள்ளாட்சி பதவிகளில் இருக்கிறார்களே அதையும், சிறுபதவிதான் என்கிறார்களா?என்று கேட்கிறார்கள் மக்கள்!

எத்துனையோ பல மேடைகளில், கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய அனுபவம் உள்ளவர்கள்தான். ஆனால், ஏன் அப்படி பேசிட வேண்டும்..?பேசிடும் அவசியம் என்ன..?என்பதுதான் அதிரை மக்களின்  இன்றைய கேள்வி!

இது குறித்து, கருத்தறிய தக்வா பள்ளியில் கே.கே.ஹாஜா காக்கா அவர்களை சந்தித்த போது,"வேண்டுமென்றோ,உள்நோக்கத்துடனோ பேசவில்லை;என் பேச்சு மனவறுத்ததை அளித்திருக்குமானால் மன்னிப்புக் கேட்டகவிரும்புகிறேன்"என்றார்.
Unknown

Unknown

3 கருத்துகள்:

  1. ஒருவரை சபைக்கு அழைத்து ..,

    அவரை மனம் வறுத்த பட வைப்பது

    மத மார்கத்துக்கு அப்பால் மனித தன்மைக்கே

    ஏற்புடையது அல்ல

    பதிலளிநீக்கு
  2. அணைத்து முஹல்லாஹ் கமிட்டி பெரிதா இல்லையா அது அப்ப வெறும் டம்மியா அப்ப அதை கலைத்துவிடலாமே அது பெரிதில்லை என்றால் அது ஆரம்பித்தபோது உலகம் முழுவதும் உள்ள அதிரை தோழர்கள் ஆஹா ஓஹோ என்றிர்ஹல் இப்போது அது சவள பிள்ளையா

    பதிலளிநீக்கு
  3. அந்த விழாவில் பேசிய அசலம் அனைத்து முஹல்லாஹ் கமிடீயையே அவர் தான் அனைத்தும் என்றும் அணைத்து முஹல்லாஹ் கமிட்டி என் சட்டை பையில் தான் என்று பேசியுள்ளார் அப்போது பார்வையாளர் ஒருவர் மேடை ஏறி கண்டனம் தெரிவித்தபோது அசலம் அத்துடன் பேச்சை நிறுத்திவிட்டார் என்றும் மேடை ஏறி கண்டனம் தெரிவித்தவரிடம் தான் விழா குழுவினர் மன்னிப்பு கேட்டதாஹ் உண்மை தகவல்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.