Breaking News
recent

தமிழக முதல்வரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி!


புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துகுமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததால் அங்கு கடந்த 12-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 20 பேர் போட்டியிட்டனர்.
 
224 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1,43,277 வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 69,259 பேரும், பெண்கள் 74,018 பேரும் வாக்களித்தனர். இது 73.48 சதவீதம் ஆகும்.
 
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 10 மேஜைகள் போடப்பட்டு 23 சுற்றுக்களாக ஓட் டுக்கள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் என 3 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
 
சுமார் 200 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணிக்கை முழுமையாக வீடியோ காமிராவில் பதிவு செய்யப்பட்டது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 108 தபால் ஓட்டுக்களில் அ.தி.மு.க. 97 ஓட்டுக்களும் தே.மு.தி.க. 2 ஓட்டுக்களும் பெற்றன. 9 தபால் ஓட்டுக்கள் செல்லாதவையாக இருந்தன.
 
தபால் ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 9.15 மணிக்கு முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியிடப்பட்டது.
 
முதல் சுற்றில் அ.தி.மு.க. 4287 வாக்குகளும், தே.மு. தி.க. 1054 வாக்குகளும் பெற்றன. இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் முதல் சுற்றிலேயே 3233 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
 
22-வது சுற்று முடிவில் அ.தி.மு.க. வெட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 70063 ஓட்டுகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
 
மொத்த வாக்குகள் நிலவரம்:-
 
அ.தி.மு.க.- 100135
 
தே.மு.தி.க.- 30072
 
ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க. வேட்பாளர் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் வாங்கி முன்னிலை பெற்றார். தே.மு.தி.க. வேட்பாளருக்கு எல்லா சுற்றுகளிலும் குறைவான ஓட்டுகளே கிடைத்தன.
 
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதியையும் அ.தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது.
எதிர் கட்சிகள் பல குற்றசாட்டுகளை மக்கள் முன்வைத்தாலும் தமிழக முதல்வர் சாதனைகளின் மூலம் மக்கள் மனத்தில் இடம் பிடித்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை!
Unknown

Unknown

3 கருத்துகள்:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.