Breaking News
recent

அமெரிக்கக் குடியுரிமையற்ற திறமையான இளைஞர்கள் தொடர்ந்து தங்கலாம்!


அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று அதிபர் ஒபாமா முன்பு அறிவித்திருந்தார். ஆனால் வாஷிங்டனில் நேற்று நடந்த கூட்டத்தில், திறமையான இளைஞர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருந்தாலும் அவர்கள் அமெரிக்காவில் தங்கலாம் என்றார்.
முறையான அமெரிக்கக் குடியுரிமை பெறாமல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, கல்வி பயின்ற இளைஞர்களும் யுவதிகளும் தாற்காலிக பணி உரிமம் பெற்று தொடர்ந்து தங்கலாம், அமெரிக்க முன்னேற்றத்துக்குப் பாடுபடலாம் என்று அதிபர் பாரக் ஒபாமா ஆணையிட்டுவிட்டார்.
ஒபாமாவின் இந்த அறிவிப்பால் குடியரசுக் கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர். அதிபரால் வழங்கப்பட்ட 'பொது மன்னிப்பு' என்றே இதனை அவர்கள் கண்டித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை அதிபர் பறித்துவிட்டார் என்றும் சாடியுள்ளனர். அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்குகளைக் குறிவைத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த ஒபாமா 'படித்த, திறமையுள்ள, அமெரிக்கா மீது பற்றும் பாசமும் கொண்ட, அமெரிக்க நலனில் அக்கறை காட்டி உழைக்கிற இளைஞர்களை 'குடியுரிமை இல்லை' என்ற ஒரே காரணத்துகாக வெளியேற்றாமல் தொடர்ந்து தங்க தாற்காலிகப் பணி அனுமதி வழங்கப்படும். அமெரிக்க தேசிய நலனுக்கும் பொது நலனுக்கும் ஊறுவிளைவிக்காத, ஊறு விளைவிக்க நினைக்காத நல்ல இளைஞர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும். இது பொது மன்னிப்பல்ல. இது தாற்காலிக நிவாரணம்’ என்றார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.