Breaking News
recent

இளம் விஞ்ஞானிகளைத் தேடும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம்

 இந்திய ராணுவத்துக்குத் தேவையான போர்த் தளவாடங்களைத் தயாரிப்பதற்கு 80,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு இளம் விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம். இந்தத் திட்டத்துக்கு ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 விஞ்ஞானிகள் தேவை. இந்தத் திட்டம் 30,000 கோடி ரூபாயில் ஆரம்பித்தது இன்று 80,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெரிய திட்டத்துக்குப் பெரிய அளவில் மனிதவளம் தேவைப்படுகிறது என்று இந்தத் துறையின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் வி.கே. சரஸ்வத் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.