தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி ஒரு பார்வை!மீள்பதிவு
ஊடகங்கள் பின்பற்றும் அரசியல் மற்றும்அவை வாசகர்களிடையே ஏற்படுத்தும்அரசியல் தாக்கம், விளைவு பற்றிபொதுவாகப் பேசப்படுகிறது. எனினும்அவற்றைக் கூர்ந்து நோக்கி நுட்பமாகஅவை செய்துவரக்கூடிய அரசியல்செயல்பாட்டை தோலுரித்துக் காட்டுவதுமிகவும் அவசியம்.
தமிழ் நாளிதழ் உலகில் பெரியஅளவுக்குவிற்பனையாகி பரவலான வாசகர்களைக்கொண்டிருக்கக்கூடியவை தினத்தந்தி,தினமலர், தினகரன், தினமணிஉள்ளிட்டவை.
இதில் நடுநிலை நாளேடு எனப்படும்தினமணி வெகு காலமாக பார்ப்பனியசிந்தனையை மையப்படுத்தி செயல்படும் நாளிதழ் என்ற விமர்சனம் உண்டு.எனினும் உலகமய கால மாற்றத்தில் தினமணி விற்பனையில் சுருங்கி, அதுஇன்று தள்ளாடித் தளர் நடைபோட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்டவட்டத்துக்குள் நிற்கும் தினமணி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், படித்தமேட்டுக்குடியினர் நாளிதழ் என்ற அதன் பழைய அடையாளத்தை அநேகமாகஇழந்து விட்டது என்று சொல்லலாம். எனவே அந்த நாளிதழின் மூலம்நிகழ்த்தப்படும் அரசியல் செயற்பாடு ஒரு குறுகிய வட்டத்துக்கு உட்பட்டதுஎன்பதைச் சொல்ல வேண்டும்.
தினகரன் கலாநிதிமாறன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட தோற்றம்காட்டினாலும் அது பொதுவாக திமுக சார்புடையது என்பதை வாசகர்கள்தெளிவாக அறிவர். அதிலும் குறிப்பாக திமுகவிற்குள் நடக்கும் குடும்பஅரசியல் சதிராட்டத்தில், தங்களுக்குச் சார்பான பிரிவை தூக்கிப்பிடிக்கும்பணியை தினகரன் செய்து வருகிறது. (உ.ம்) கலைஞரை பிராண்ட்டாகபயன்படுத்துவது, ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அழகிரி,கனிமொழியை கழற்றி விடுவது. தினகரனைக் கூர்ந்து நோக்குவோர் இதைஅறியமுடியும். ஆனால் இது மட்டுமே தினகரன் செய்யும் வேலை என்றுநினைத்து விடக் கூடாது. இதனிலும் முக்கியமாக தினகரன் நவீனதாராளமயக் கொள்கையை மிக வலுவாக ஆதரித்து, இடதுசாரி முற்போக்குசக்திகளை மிக இழிவாகக் காட்டி கீழே தள்ளும் வேலையை நன்குதிட்டமிட்ட முறையில் மிக, மிக கவனமாகச் செய்து வருகிறது. ஒவ்வொருநாள் தினகரனையும் எடுத்துவைத்துப் பேசினால் இதை திட்டவட்டமாகநிரூபிக்க முடியும். இதுதான் நிரந்தர ஆபத்தானது. இதன் வாசகப் பரப்புதமிழகத்தில் தினத்தந்தி, தினமலருக்கு அடுத்து மூன்றாமிடத்தில் தான்இருக்கிறது. (அதாவது விற்பனை அடிப்படையில் பிரதிகள் சற்று முன்பின்கூடுதலாக இருந்தாலும் வாசகர் வாசிப்பில் மேற்கண்ட இரண்டையும்அடுத்தது தான் தினகரன்.) எனவே ஒப்பீட்டளவில் தினகரனும் வரம்புக்குஉட்பட்டது தான்.
இப்போது தினமலர். இது தினமணி, தினகரனை விட ஆபத்தான நஞ்சேற்றும்காரியத்தைச் செய்து வருகிறது என்பதை பொதுவான முற்போக்குநோக்கர்கள் அறிவர். தினகரன் செய்யத் தயங்கும் ஒரு விசயத்தை தினமலர்கூசாமல் செய்யும். அதுதான் மதவெறி நஞ்சேற்றுவது. பார்பனியத்தின்அரசியல், சமூக, கலாசாரக் கூறுகளை அதன் ஒவ்வொரு எழுத்திலும்பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் இடத்தில் தனிமனிதத்துவத்தை நிறுத்துவது,ஆன்மிகம் என்ற பெயரில் மதப்பழமையைத் திணிப்பது, உலகமகாயோக்கியனைப் போல் தனக்கு முன்னால் இருக்கும் எல்லா விசயங்களையும்மிக மிகக் கீழ்த்தரமாகத் தாக்குவது, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுஎன்பதை விட அறிவுரை சொல்லும் தொனியில் வெளிப்படுத்துவது எனஅதன் ஒவ்வொரு அம்சமும், பாங்கும் வர்ணாஸ்ரமத்தின் நவீன வெளிப்பாடுதான்.
எனவே இடதுசாரி, திராவிட இயக்கங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்ட எதிர்க் கருத்தாளன் தினமலர் என்று சொல்ல முடியும்.கண்ணுக்குத் தெரிந்த எதிரி என்பதால் இதை நாம் அறிந்து வெளிப்படையாகவிமர்சிக்க முடிகிறது. அதேசமயம் அரசியலை புரிந்து கொண்ட அல்லதுஅறிந்து கொண்ட வாசகர் பரப்பு மிக மிகக் குறைவு எனும்போது அதற்குஅப்பால் அது சென்றடையும் வாசகர்கள் (பெரும்பாலும் கீழ் மத்திய தரவர்க்கத்தார்) எத்தகைய தாக்கத்துக்கு இரையாக்கப்படுகிறார்கள் என்பதையோசித்துப் பாருங்கள்.
இப்போது நாம் பேசப் போவது தினத்தந்தி பற்றி. தமிழ் நாட்டில் நாளிதழ்வாசிப்பைப் பரவலாக்கியதில் இந்த இதழின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.தினத்தந்தி படித்துத் தான் தமிழ் கற்றுக் கொண்டேன் என்று திரைப்படநடிகைகள் சொல்வதைப் பலர் படித்திருப்போம். பொதுவாக தினத்தந்தியைஆளும்கட்சி நாளிதழ் என்று சொல்வதுண்டு. ஆட்சியாளர்களை ஆதரித்தால்அரசு விளம்பரம் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்வருமானத்தைப் பெறலாம் என்பது தான் இதற்கு பின்னணி என்பர். இந்தஇதழ் நிகழ்த்தும் அரசியல் மிக மிக நுட்பமானது.
ஆளும்கட்சி பத்திரிகை என்று சொல்லப்பட்டாலும் முன்பெல்லாம் இவர்கள்செய்வது முன்னுரிமையை மாற்றிக் கொள்வது தான். அதாவது ஆளும்கட்சிசெய்திகளை முதல் பக்கத்தில் அல்லது வாசகர்களின் பார்வைக்கு எளிதில்படும் வண்ணம் இடம் பெறச் செய்து, எதிர்க்கட்சிகள் செய்திகளை ஏதோ ஒருமூலையில் போட்டிருப்பார்கள். எதிர்க்கட்சி செய்திகளை பின்னுக்குத்தள்ளுவார்களே அல்லாது போடாமல் விட்டுவிடமாட்டார்கள். ஆனால்தற்போது தினத்தந்தியின் இந்த செயல்பாட்டிலும் வேறுபாடு தெரிகிறது.
எந்தச் செய்தி எந்தப் பக்கத்தில் வர வேண்டும், எந்தப் படம் இடம் பெறவேண்டும், எது வரக்கூடாது என்பது உள்பட தமிழக முதல்வரின் கடைக்கண்பார்வைக்கேற்பத் தான் தினத்தந்தி வெளிவருகிறது. இது போகிற போக்கில்சேற்றை வாரிவீசும் குற்றச்சாட்டு அல்ல. தமிழகத்தின் சற்றேரக்குறைய ஒருகோடி வாசகர்களை - அதுவும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்ததமிழர்களைச் - சென்றடையும் நாளிதழ் என்பதால் கூர்ந்து கவனித்து,தொடர்ந்து படித்து வருவதால் இந்த மதிப்பீட்டை முன்வைக்கிறேன்.
அதற்கு ஒரேயொரு நிரூபணம் இன்றைய (நவம்பர் 27) தினத்தந்தி நாளிதழ்.நீராராடியா தொலைபேசி உரையாடல் பதிவு பற்றி அதிமுக தலைவிஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அது திமுகவை அப்பட்டமாகஅம்பலப்படுத்துவதாக உள்ளது. இந்த செய்தி தினத்தந்தியில் இடம்பெறவேயில்லை. அதாவது சற்றேரக்குறைய ஒரு கோடிப் பேரிடம் இந்ததகவல் மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுகவை யாரும் வீழ்த்தமுடியாது என்ற கருணாநிதியின் செய்தி வாசகர் கவனத்தை ஈர்க்கும்இடத்தில் உள்ளது.
திமுக எதிர்ப்புணர்வு அல்லது அதிமுக ஆதரவு உணர்வு என்றஅடிப்படையில் இதைச் சொல்லவில்லை. இங்கு வலியுறுத்திக் கூறவிரும்புவதெல்லாம், நான்கு முன்னணி நாளிதழ்களில் தினத்தந்தி நிகழ்த்தும்இத்தகைய அரசியல் செயல்பாடு தான் மிகுந்த விளைவைஏற்படுத்தக்கூடியது என்பதுதான்.
நன்றி:மாற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்