Breaking News
recent

சிரியாவின் பஷர் அல் அஸத் ஒரு கோவேறு கழுதை ஷெய்க் யூசு.ப் அல் கர்ளாவி கடும் கண்டனம்

சிரியாவின் பஷர் அல் அஸத் ஒரு கோவேறு கழுதை என ஷெய்க் யூசு.ப் அல் கர்ளாவி கடுமையாக சாடியுள்ளார். சிரிய மக்கள் விரைவில் வெற்றி பெறுவர் என்றும் கொடுங்கோலன் பஷரும் அவனது ஆட்சியும் இழிவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குத்பா பிரசங்கத்தின் போது ஷெய்க் கர்ளாவி சிரிய மக்களை விழித்துப் பேசினார். ” சகோதரர்களே! உறுதியுடன் நில்லுங்கள். நீங்கள்தான் வெற்றிபெறுபவர்கள். பிரபஞ்சத்தில் இறை நீதிக்கும், இறை நியதிக்கும் எதிராக யாரும் நிற்க முடியாது. அநீதி நீதியை வெல்ல முடியாது. சத்தியம் அசத்தியத்தை வெல்ல முடியாது. இழிவு சிறப்பை வெல்ல முடியாது. தீமை நன்மையை வெல்ல முடியாது” என அவர் கூறினார்.
”நீங்கள் வெற்றி பெறுவது உறுதி. அநியாயக்காரன் அகற்றப்படுவான். அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இழிவுதான்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ஷெய்க் கர்ளாவி பஷர் அஸதின் பெயர் குறித்துப் பேசினார். ”அஸதின் சரியான பெயர் கோவேறு கழுதையாகும். அவனது பெயர் அஸத் என மாற்றப்பட்டிருக்கிறது என்றார். (அஸத் என்றால் அறபு மொழியில் சிங்கம் எனப்படும்) அவன் ஒரு மிருகம். அவன் மனிதப் படைப்பில்லை. அவன் மக்களைக் கொலைசெய்கிறான். அழிக்கிறான். அவர்களது மானங்களில் அத்துமீறுகிறான்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

”சிரிய மக்கள் வீரப்புருஷா்கள். அவர்கள் தினமும் மக்களைக் கொன்று குவிக்கும் அவர்களை அழிக்கும் அடக்குமுறையாளனுக்கு முன்னால் நிற்கின்றனர்” எனவும் அவர் அவா்களைப் பாராட்டிப் பேசினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.