Breaking News
recent

சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வு: பர்தாவை அகற்ற சொன்னதால் பரபரப்பு


சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வு: பர்தாவை அகற்ற சொன்னதால் பரபரப்பு
சென்னை விருகம்பாக்கம் பாலலோக் தனியார் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்தார். ஆனால் தேர்வு அறைக்குள் பர்தாவுடன் வரக்கூடாது என்று ஊழியர்கள் கண்டிப்புடன் தெரிவித்தனர். 

ஆனால் பர்தாவை அகற்ற அந்த பெண் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் எடுத்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்கலாம். உடை விஷயத்தில் தலையிடகூடாது என்று அந்த பெண் காரசாரமாக வாதம் செய்தார். 

ஆனால் தேர்வு மைய ஊழியரோ பர்தா அணிந்து தேர்வு எழுதினால் நீங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் விவாதிப்பது எப்படி தெரியும்? என்று கூறி உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதனால் சிறிது நேரம் பரபப்பு ஏற்பட்டது. பின்னர் பர்தா அணிந்தபடியே அவர் தேர்வு எழுதினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.