Breaking News
recent

மெளலவி A. ஹைதர் அலி ஆலிம் பயானுக்கு தடை?


நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் பெண்களுக்கான வாராந்திர பயான் மெளலவி A. ஹைதர் அலி ஆலிம் அவர்களால் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

ஷ‌ம்சுல் இஸ்லாம் சங்கம் இந்த தடையை அறிவித்திருப்பதாகவும் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் ஆயிஷா மகளிர் அரங்கத்தின் நிர்வாகியும், அதிரை பேரூராட்சி தலைவருமாகிய சகோ. அஸ்லம் அவர்கள் கூறியதாக அதிரை இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்த தடை என்பதற்கான காரணங்கள் வெளியாகவில்லை.மெளலவி A. ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவல்துறை மற்றும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த‌தாக கூறப்பட்டுவரும் இந்நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத‌த்ப்படுகிறது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.