Breaking News
recent

புகைபிடிக்காதீர்! போக்குவரத்து துறைக்கு நமது வேண்டுகோள்!!


அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடமாக கடந்த பல வருடங்களாக Point to Point பேருந்து போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. கடந்த சில நட்களாக அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்த நல்ல பேருந்துகள் அனைத்தையும் பழைய பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. இதில் Point to Point பேருந்து அரசு பணிமனைகளிலிருந்து கழிக்கப்பட்ட மிகப் பழமையானதை இந்த வழித்தடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

பேருந்து எதுவாக இருந்துட்டு போகட்டும், ஆனால் இந்த பேருந்திலிருந்து வெளிவரும் (கரும்)புகை அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடத்தில் கம்பனின்(எக்ஸ்பிரஸ்) மூதாதையர்கள் கடந்து செல்வதுபோன்ற பிரம்மை ஏற்படுத்தக்கூடிய புகைவண்டி செல்லுவது போல் உள்ளது. 

இதோ இந்த காணொளிய கொஞ்சம் உற்றுப் பாருங்கள் தார்சாலை புகை வண்டியை (உங்கள் கண்களுக்கு புகை நெருங்காது என்ற உத்திரவாதத்துடன்).


இந்த பேருந்து(கள்) செல்லும் வழித்தடங்களில் வியாபார தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகம் இருப்பதனால் மக்களின் நடமாட்டமும் அதிகமே. இவைகள் அனைத்திற்கும் slow poisonயை இலவசமாக காற்றில் கலந்து தன்னுடைய மக்கள் சேவையை செய்து வருகிறது.

அதிரையில் சுகாதாரம், சுற்றுச்சூழல் மாசு சுத்திகரிப்பு பற்றி விழிப்புணர்வோடு அதிகமதிகம் பேசப்படுகிறது, அதற்காக வெளியூர்களிலிருந்தெல்லாம் சுகாதரத்துரையும் தேவைக்கேற்றார்போல் விசிட்டும் அடிக்கிறார்கள். ஒரு நாளைக்கு பல முறை அங்கும் இங்கும் செல்லும் இந்த அரசு பேருந்துக்கு பின்னால் சென்று சுற்றுச் சூழல் சீர்கேட்டை கொஞ்சம் சீர் தூக்கிப் பார்த்து ஆவன செய்தால் முகத்தில் கரிபூசாமல் வைத்த புன்னியமாவது கிடைக்குமே!

இந்த பழுதடைந்த அரசு பேருந்துகளை மாற்ற அதிரையின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பேரூராட்சி நிர்வாகம் மற்ற அமைப்புகள் அரசு பேருந்து நிர்வாகத்திடம் தெரிவித்து மக்கள் நலனை காப்பாற்ற வேண்டும்.
Unknown

Unknown

2 கருத்துகள்:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.