Breaking News
recent

கொட்டும் மழையிலும் அதிரையில் சுகாதாரப் பணி

கொட்டும் மழையிலும் அதிரையில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ள அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளகள்!டெங்கு,பறவை காய்சல் என்று மீடியாக்களின் பங்கங்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் இவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
சுகாதாரம் கெட்டு நோய் வந்தப்பின் நொந்துப்போவதைவிட வரும்முன் காப்பதுமேல் என்று செயல்படும் இவர்களை அதிரை மக்கள் நன்றியோடு பார்க்கவேண்டும்.
இந்த நேரத்தில்,அதிரை பேரூராட்சித்தலைவர்,துணைத் தலைவர், அனைத்து உறுப்பினர்கள், குறிப்பாக துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நம‌து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
துப்புரவு பணியாளர்கள் நமது சுகாதரத்திற்காகத்தான் கொட்டும் மழையென்றும்,அதிகாலை யென்றும் பார்க்காமல் தங்களைப் பற்றிக்கூட கவலைப்படாமல் உழைக்கிறார்கள்.
அவர்களை அன்போடும் பாசத்தோடும் நாம் அவர்களை நடத்த வேண்டும் என்பதே நமது கோரிக்கை!

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.