அதிரை நெசவு தெரு பூனாச்சுக்கொட்டை வீட்டைச் சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகன் முகமது நசீம்(14) இவர் காதர்முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
இன்று பிற்பகல் மூன்று மணியளவில் பெரிய கடைதெரு வழியாக நசீம் சென்றுக் கொண்டு இருந்த போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த டிராக்டர் நசீமின் தலைமேல் ஏறி இறங்கியது.
இதனால் ஆபத்தான நிலையில் இருந்த நசீமை தமுமுக ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்படி செல்லும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டார்.(இன்னாலிலாஹி...) தற்போது அவரது உடல் நமதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உயிர் இழப்பு சம்பவம் நடந்தபோது, டிராக்டர் ஓட்டுனர் "புல் தண்ணியில்" இருந்தாகவும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நசீம்மீது டிராக்டர் ஏறுவதை கவனத்தவர்கள் சத்தமிட்டும் டிரைவர் கவனத்தில் எடுத்திக்கொள்ளவில்லை என்று அவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
இன்ஷாஅல்லாஹ் மேலும் கூடுதல் தகவல் கிடைக்குமானால் அவற்றையிம் பதிவோம்!
அன்பு நசீமை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு அல்லாஹ் சபூர் என்னும் பொருமையை கொடுப்பானாக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
பதிலளிநீக்குநெஞ்சம் பதபதைக்கிறது...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பதிலளிநீக்குஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பதிலளிநீக்குஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பதிலளிநீக்கு