Breaking News
recent

பாலியல் குற்றத்தை தடுக்க பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்புகலை கற்றுத்தர வேண்டும்: ஹசீனா சையத்!


தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஹசீனா சையத் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு, ஸ்ரீவைகுண்டத்தில் மாணவி கற்பழித்துக் கொலை போன்ற பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க விரைவு கோர்ட்டுகள் அமைத்து உடனுக்குடன் தண்டிக்க வேண்டும்.
 
அப்போதுதான் பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோருக்கு தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம்.
 
பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் மாணவிகளுக்கு கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளைத் கற்றுத்தர வேண்டும். இதன் மூலம் மாணவிகள் பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து எளிதில் தப்பிக்க முடியும்.
 
இவ்வாறு ஹசீனா சையத் கூறியுள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.