Breaking News
recent

காதர் முகைதீன் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடந்தது!







அதிரை காதர் முகைதீன் கல்லூரியில் இன்று காலை 10மணிக்கு நடைபெற்றது. தஞ்சை மாவட்ட சிறப்புத்திட்ட செயலாக்கம், மாவட்ட துணை ஆட்சியர் திரு.பி.குணசேகரன் தலைமையில்,தஞ்சை மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.அமுதாராணி முன்னிலையில் இவ்விழா நடந்தது.

பேராசிரியர் சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.கல்லூரி முதல்வர் ஏ.ஜலால் வரவேற்றார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன்,அதிரைப் பேருராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம்,அதிரைப் பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

காதர் முகைதீன் கல்லூரி செயலர், கே.எஸ்.சரபுதீன் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.
கல்லூரியின் மைய அலுவலர். என்.ஜெயவீரன் நன்றியுரையாற்றினார்.

கல்லூரின் ஆட்சி மன்ற உறுப்பினர்கள்,அதிரை பேருராட்சி மன்ற உறுப்பினர்கள்,அதிமுக அதிரை நகர துணைத்தலைவர் எம்.ஏ.முகமது தமீம், பாசறை செயலாளர் அகமது தாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.