Breaking News
recent

ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி மார்ச் 15–ந் தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு அறிவிப்பு

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுக்கான ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைத்து வழங்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி தொடங்கி இம்மாதம் இறுதி வரை நடைபெற்று வந்தது.

உள்தாள் ஒட்டும் பணி சிறிதுகாலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின் பேரில், உள்தாள் இணைக்கும் பணி மார்ச் 1–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.