Breaking News
recent

அதிரை பேருந்து நிலையம் கட்ட ரூ38லட்சமும்;தஞ்சை வரும் முக.ஸ்டாலினும்!

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் கட்ட 38 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டு உறுதிமொழியை மத்திய அமைச்சர் எஸ் பழனி மானிக்கம் அவர்களிடமிருந்து அதிராம்பட்டினம் பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் பெற்றார்.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் ஊரின் வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவது சம்மந்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.பேருராட்சித் தலைவரின் கேரிக்கை ஏற்று திநி ஒதுக்கீடு செய்யவுள்ள மத்திய அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தார்.

தஞ்சையில் நாளை செயல்வீரர்கள் கூட்டம்:
தஞ்சையில் வருகிற 23–ந் தேதி தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

தஞ்சை சந்தனஆரோக்கிய மகாலில் தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 23–ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளரும், மத்தியமந்திரியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை தாங்குகிறார்.

உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணி, தி.மு.க. நகரசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான உபயதுல்லா, முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு, முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் வரவேற்று பேசுகிறார். கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

அதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம்அவர்கள்  வேண்டுகோள்:

தஞ்சையில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிரை நகர கிளை கழத்தில் இருந்து திரளாக கலந்துக்கொள்ளவேண்டும் என்று அதிரை பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்கள்கேட்டிக்கொண்டுள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.