புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிக்கு 49 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேசன் அன்ட் ரிசர்ச் (ஜிப்மர்), கல்வி மையம் மத்திய அரசின் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு கல்வி நிறுவனமாகும்.
இங்கு பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகளை படித்தவர்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.
பேராசிரியர் பணிக்கு 19 பேரும், உதவி பேராசிரியர் பணிக்கு 30 பேரும், இதர பணிகளுக்கு 5 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கார்டியாலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, நெப்ராலஜி, சர்ஜிகல் ஆன்காலஜி, என்டோகிரினாலஜி, நியுரோ சர்ஜரி, இ.எம்.எஸ்., சி.டி.வி.எஸ்., பல்மோனரி மெடிசின், ரேடியோகிராபி, ஜெனரல் சர்ஜரி, மைக்ரோபயாலஜி உள்ளிட்ட படிப்பு படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளியிடப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் உத்தேசமாக ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இருக்கலாம். இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 11–3–13 தேதி ஆகும்.
வயது வரம்பு, கல்வித்தகுதி, அனுபவம், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்களை www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்