இதன் முந்தைய செய்தியில் அதிரை பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமிக்க துடிக்கும் அதிரை பேரூராட்சி!பரபரப்பு ரிப்போர்ட்!! வெளியிட்டு இருந்தோம்.
செய்தி வெளியாகிய சில மணிகளிலேயே, இந்த அறிவிப்பு பலகை/தட்டி அகற்றப்பட்டது என்று அதிரை பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் அவர்கள் நம்மை தொடர்புக்கொண்டு தெரிவித்தார்.(படம் இணைப்பு)துரிதமாக செயல்பட்ட அதிரை பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பலகை/தட்டியில் இருந்த அறிவிப்பு இதுதான்.
"முக்கிய அறிவிப்பு.அதிராம்பட்டினம் பேரூராட்சி 21வது வார்டில் உள்ள செக்கடிக்குளம் அரசுக்கு சொந்தமானதாகும். மேற்படி இடத்தில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் மீறி நடப்பவர்கள் மீது நில ஆக்கிரமிப்பு சட்டத்தீன் கீழ் கைது செய்யப்படும். ஏற்கனவே கட்டி இருக்கக்கூடிய கட்டிடங்களை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
பேரூராட்சி நிர்வாகம் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி"
இப்போது |
தேவையானால் இன்ஷாஅல்லாஹ் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்