Breaking News
recent

பராமரிப்பால் நாளை முதல் திருச்சி- தஞ்சை மார்க்கத்தில் 8 ரயில் சேவை ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை திருச்சி - தஞ்சாவூர் மார்க்கத்தில் 8 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் (16233) இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலும் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

திருச்சி - நாகூர் பயணிகள் ரயில் (56853) திங்கள், செவ்வாய், புதன் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி- நாகூர் மற்றொரு பயணிகள் ரயில் (56852) செய்வாய், புதன்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை தோறும் இயக்கப்படும் கோவை - மயிலாடுதுறை சதாப்தி ரயில் (12084) திருச்சி வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - மயிலாடுதுறை பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை 8 ரயில்கள் இயங்காது என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களின் ரத்து அறிவிப்புக்கு பொதுமக்கள், வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில்களை இயக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.