Breaking News
recent

அமெரிக்க விசா: போலி ஆவணங்கள் சமர்ப்பித்த நால்வர் கைது

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து விசா பெற முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுதீர் ரெட்டி (28), அசோக்குமார் அக்குவால் (30), நரேந்தர் வாவிலால் (28), ரவிச்சந்திர கவுண்டரி (28) ஆகிய நால்வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் வியாழக்கிழமையன்று (ஜூலை 25) அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து விசா பெற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.துணைத் தூதரக அதிகாரிகள் அவர்கள் நால்வரையும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நன்றி:தினமணி
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.