இஸ்லாமியப் பெருமக்களை கௌரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.
அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வருகின்ற 5.8.2013 (திங்கட்கிழமை) அன்று மாலை சென்னை, லீ ராயல் மெரிடியன் நட்சத்திர விடுதியில் இஃப்தார் விருந்து அளிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், அ.தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
என்று அதிமுக தலைக் கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்