Breaking News
recent

தொழுகையில் சுஜுதுடைய நிலையில் கொல்லப்பட்டார்கள்...

புனித ரமழானுடைய நாட்களில் நோன்பை நோற்ற நிலையில் ,அல்லாஹ்வின் மார்க்கத்துக்காக போராடும் எமது எகிப்திய சகோதரர்களை நவீன பிரவ்ன் ஸீ ஸீயின் வாரிசுகளான எகிப்திய இராணுவம் அவர்களின் போராட்டத்தைத் தடுக்க மேற்கொண்ட கொடுமையைப் பார்த்தீர்களா?

தொழுகையில் சுஜுதுடைய நிலையில் அல்லாஹ்வோடு உரையாடிக் கொண்டிருந்தவர்களையும், குழந்தைகளையும், பெண்களையும், மாணவர்களையும், உண்மை சொல்லும் ஊடகவியலாளர்களையும், மொத்தத்தில் ஈமானிய மனிதர்களான 250க்கு மேற்பட்ட சகோதரர்கiளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 4500க்கு மேற்பட்ட சகோதரர்களை காயப்படுத்தியும் பழி தீர்த்திருக்கிறார்கள். எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் நாங்கள் வெற்றி பெறுவோம்.

நாங்கள் சுவனத்தின் மீது இலட்சியம் கொண்டவர்கள் :

அலட்சியமான பதவிக்காக எங்களது ஈமானின் மீது மோதிப்பார்க்க நினைக்கும் ஷெய்த்தானிய வார்சுகளே! ஒரு போதும் நாங்கள் தோற்க மாட்டோம். எங்களது வாழ்வும் மரணமும் அகிலத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஏக இறைவனுக்கு மாத்திரமே!

முகநூல் பக்கம்


படைத்தவனிடன் யாசிக்கும் உடன் பிரவா சகோதரர்கள்

உலகப் புகழ் பெற்ற காரி முஷாரி அல்அபாஸி நேற்று குவைத் தலைநகரில் நகரில் அமைந்துள்ள மஸ்ஜித் கபீரில் எகிப்து நாட்டிற்கா துஆ கேட்கும் போது...

பசி, பட்டினி, பஞ்சத்தில் இருந்து பாதுகாக்க நபி யூஸுபை தந்த எகிப்து நாட்டின் இரட்சகனே!

சிலை வணக்கத்தில் இருந்து பாதுகாக்க நபி மூஸாவை தந்த எகிப்தின் இரட்சகனே!

எகிப்து மண்ணில் பிறந்த ஹாஜராவை நபி இப்ராஹீம் அவர்களுக்கு மனைவியாக தந்த இரட்சகனே!

நைல் நதிக் கரையில் வளர்ந்த மாரியாவை இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மனைவியாக தந்த இரட்சனே!

நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜீலை வழங்கிய எகிப்தின் இரட்சகனே!

கிருபையாளனுக் எல்லாம் கிருபையாளனே எகிப்து நாட்டை அனைத்து தீங்கிலிருந்தும் பாதுகாப்பாயாக!

நீதி நியாயத்திறகாக போராடும் எகிப்து மக்களுக்கு எதிரக யார் சூழ்ச்சி செய்கிறாறோ அவர்களை தண்டிக்க நீPயே போதுமானவன்.

இறைவா! விடியலுக்காண வழி தேடி எமது கைகள் சோர்ந்து விட்டன. ஆனால் வெற்றியையும் விடுதலையையும் தரும் உன்னிடத்தல் கையேந்துவதற்கு சோர்ந்து விடவில்லை. உன்னிடம் இறைஞ்சுவதற்கு எங்கள் நாவுகள் களைப்பதுமில்லை.

இறைவா இனிமேலும் எமது விடியலுக்காக யோசிப்பதில் மூளை களைத்து விட்டது. ஆனால் விடுதலை தாகம் கொண்ட எமது உள்ளங்கள் உன்னோடு உரையாட களைப்பதில்லை.

இதோ தாகித்த உள்ளங்கள் யாசிக்கின்றன. இறiவா எகிப்து நாட்டை பாதுகாப்பாயாக. கொடுமைக்காரர்களை அழித்து விடுவாயாக!

சக்திமிக்க ரஹ்மானே! எகிப்து நாட்டின் முஸ்லிம் மக்களை.. வாலிபர்களை பாதுகாப்பாயாக! அநியாயக்காரர்களின் பிடியிலிந்து அவர்களை விடுவிப்பாயாக. ஆமீன் 


நாமும் அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக!

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.