Breaking News
recent

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். 2007–ம் ஆண்டு முதல் இலங்கையில் தொடங்கிய இன அழிப்பு போர் மூலம் லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வந்தனர். இலங்கை அரசு நடத்திய அந்த போருக்கு இந்தியா ஆயுதம் உள்ளிட்டவை கொடுத்து உதவக்கூடாது என்றும், அங்குள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் ராமேஸ்வரத்தில் 2008–ம் ஆண்டு திரை உலகம் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அன்று முதல் இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபட்டு வருகிறார்.
ஒய்.எம்.சி.ஏ. அரங்கில்...
இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அரணையூர் ஆகும். அங்கு செந்தமிழன்–அன்னம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த சீமானுக்கு, 2 சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். சீமான், முன்னாள் அமைச்சர் காளிமுத்து–மனோகரி தம்பதியின் மகள் கயல்விழியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் செய்து கொள்கிறார். மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
பழ.நெடுமாறன் தலைமையில்...
சீமான்–கயல்விழி திருமணம் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் இணைந்து செய்துள்ளனர். திருமண விழாவில், அரசியல் பிரமுகர்களும், திரை உலகத்தினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.