அதிரையில் இன்று 17-9-13 காலை 10 மணிமுதல் "அம்மா திட்டம்" நடைபெற உள்ளது. இதனை அதிரை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிரை ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் "அம்மா திட்டம்"
(அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் திட்டம்)
முகாமன்று கிராம பொது மக்களால் அளிக்கப்படும் மனுக்களில் கீழ்கண்ட இனங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்கப்படும்.
முகாம் நடக்கும் இடம் : அதிரை பைத்துல்மால், நடுத்தெரு, அதிராம்பட்டினம்.
முகாமன்று பொதுமக்கள் கீழ்க்கண்ட இனங்கள் தொடர்பாக மனுக்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள் ளப் படுகிறார்கள்.
1. பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்).
2. குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள். 3.பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள்.
4. சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள்.
5. வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
6. முதல் பட்டதாரி / குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற் கான சான்றிதழ்கள்.
7.ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள்.
8. குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள். 9. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள். 10. துயர் துடைப்பு / விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்