நேற்றைய விவகாரம்: அதிரையின் தற்போதைய நிலவரம்!

அதிராம்பட்டினம் அருகே உள்ள நடுவிக்காட்டில் அதிரையர்கள் சிலருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் தண்ணீர் திறந்து விடுவதற்காக நேற்று காலை சென்றவரை வழி மறித்து தாகத வார்தைகளையும் துவேசம் நிறைந்த சொற்களையும் கூறி அஜீத் குமார் என்பவர்  ஊரில் உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.

இதனால், நேற்று 21/9/13 அதிரை காவல் நிலையத்தில் அதிரை மக்கள், சம்மந்தப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கூடினர். பின்னர் அவர்மீது புகார் கொடுக்கப்பட்டதின் பெயரில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது.

இப்போதுவரை அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. இந்நிலையில், நடுவிக்காடு மற்றும் 22 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அஜித் குமார் சார்பாகவும் பாதிகப்பட்டவர் சார்பாக அதிரையின் முக்கிய பிரமுகர்களும் காவல் நிலையத்தில் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர்.
 #மேலும் செய்திகள் இருந்தால் தருவோம்; இன்ஷாஅல்லாஹ்!#


Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.