அதிரையில் தாறுமாறாக ஓடிய இருசக்கர வாகனத்தில் சிக்கி உயிர் பலி !

தட்டார தெருவில் இன்று பிற்பகல்  இரண்டு மணியளவில்  வாய்க்கால் தெருவிலிருந்து சேர்மன் வாடிக்கு இருசக்கர வாகனத்தை சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் மிகவும் வேகமாக ஓட்டி வந்துள்ளான். அப்பொழுது பிச்சை பத்தர் வீடருகே மேய்துகொண்டிருந்த ஆட்டுக்குட்டியின் மீது வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தததாக சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூறினார்

இது பற்றி  அப்பகுதிவாசி கூறுகையில் ...

அதிரையை பொருத்தவரையில் பெரும்பாலனவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகங்களை ஓட்டுவதாலும் உரிமம் பெற தகுதியற்ற வயதை உடையவர்கள் ஓட்டுவதாலுமே இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன என கூறினார் மேலும் அவர் கூறுகையில் தமிழக வட்டரபோக்குவரத்து துறை தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு உரிமம் இல்லாமல்  வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

அதுபோல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து ஓட்டுனர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகங்களை இயக்க அறிவுறுத்த வேண்டும்.அல்லாமல் உயிர்போன பின் தலையில் அடித்துக்கொண்டு கதறியழுவதில் எந்தப்பயனும் இல்லை.

Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.