Breaking News
recent

தஞ்சை மாவட்டத்தில் காசநோய் மருத்துவர், சுகாதார பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பாஸ்கரன் தகவல்




தஞ்சை மாவட்டத்தில் காசநோய் மருத்துவர், சுகாதார பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் கூறி உள்ளார்.
காசநோய் தடுப்பு திட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2000–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிகிச்சையை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து முழு கால அளவிற்கு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தவும், நோயாளிகளுக்கு நலக்கல்வி அளிக்கவும் காசநோய் சுகாதார பார்வையாளர்கள் 8 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டு பணி புரிந்து வருகிறார்கள்.
மருத்துவர்– சுகாதார பார்வையாளர்
இந்த திட்டத்தில் மேலும் ஒரு காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடமும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் காசநோய் பிரிவில் ஒரு மருத்துவர் பணியிடமும் காலியாக உள்ளது.
மருத்துவர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ். அல்லது இந்திய மருத்துவ குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெற்ற அதற்கு சமமான கல்வித்தகுதி, மற்றும் பயிற்சி உறைவிட மருத்துவர் முடித்தவராக இருத்தல் வேண்டும். சுகாதார பார்வையாளருக்கான கல்வித்தகுதி 12–ம் வகுப்பு (அறிவியல்) தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்நோக்கு சுகாதார பணியாளர் அல்லது பெண் சுகாதார பார்வையாளர் அல்லது தாய்மை மருத்துவ துணை செவிலியர் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை துணை இயக்குனர் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், ராஜாமிராசுதார் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர் 613001 என்ற முகவரிக்கு வருகிற 25–ந்தேதி மாலை 5 மணிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.