ஹைதராபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2013-14 கல்வியாண்டில் முதுகலை பட்டய படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பவர்கள் 3வருட படிப்பில் உருது பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.,4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். குறித்த தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் ரூ.200 அபராத தொகையுடன் சேர்த்து அக்.,25க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.manuu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்