Breaking News
recent

அதிரைக்கு த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் M.L.A. திடீர் விசிட்

இன்று த.மு.மு.க. மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் M.L.A. அவர்கள் இராமநாதபுரம் கடல் பகுதியில் கடலில் கடற்ப்பாசி பயிரிட்டவர்களின் பயிர்கள் அழுகி நஷ்டம் ஏற்பட்டது குறித்து ஆய்வை முடித்து விட்டு  திரும்பும் வழியில் அதிரை நகர த.மு.மு.க. நிர்வாகிகள் கேட்டுகொண்டதற்கிணங்க அதிரைக்கு வந்தார். 

அப்போது அதிரை அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றிய இடத்தை பார்வையிட்டார். அங்கே திரண்டு வந்து மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனை கேட்டுக்கொண்ட  த.மு.மு.க. மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் M.L.A. அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தமுமுக தலைவருக்கும் அதிரை தமுமுக நிர்வாகிகளுக்கும் ஏரிப்புறக்கரை மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நன்றி:படம் அதிரைநியூஸ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.