அதிரை மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் இன்று 17/10/13 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை துண்டிக்கபடுவதாக இருந்தது!
இன்று பெருநாளின் தொடர்ச்சி...இன்நிலையில் இன்று மின் நிறுத்தம் ஏற்பட்டால் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அதிரை மின்சார வாரியத்திற்கு அதிரை தமுமுக மற்றும் மமக முறையாக சொல்லியது. ஆனாலும் அதிரை மின்வாரியம் வழக்கம்போல் “மின் துண்டிப்பில் மாற்றம் இல்லை” என பிடிவாதமாக இருந்தனர்.
இன்று மின்துண்டிப்பு செய்தால்,அதிரை தமுமுக மற்றும் மமக “சாலை மறியல் செய்யும்” என்று அறிவித்தனர். இதனை தொடர்ந்து தமுமுக, மமகவின் நியாயத்தை உணர்ந்த அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அதிரை மின்வாரியத்திடம் பேசினார்.
மின்நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டது இதனால், தமுமுக,மமகவின் சாலை மறியல் அறிவிப்பும் வாபஸ் வாங்கப்பட்டது!
ஆடுகிற மாட்டை ஆடி தான் கறக்கணும்கிறது தமுமுக,மமகவிற்கு தெரியாதா என்ன..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்