Breaking News
recent

பட்டுக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம்! டிஎஸ்பி வெங்கடேசன் அறிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டுக்கோட்டை பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தீபாவளி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பட்டுக்கோட்டை பெரியதெருவில் பஸ்கள் உட்பட 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதேபோல் தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை, அறந்தாங்கி, ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலிருந்து பட்டுக்கோட்டைக்குள் வரும் பஸ்கள் சாமியார் மடம், ஜிஎன்பி திருமண மஹால், வடசேரி நால்ரோடு, தலைமை தபால் நிலையம், தாலுகா காவல் நிலையம், முருகையா தியேட்டர், வளவன்புரம் பிரிவு சாலை, கைகாட்டி, அந்தோணியார் கோயில் தெரு, அதிராம்பட்டினம் ரோடு வழியாக பேருந்து நிலையத்திற்கு வரவேண்டும்.

அதேபோல் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிராம்பட்டினம் ரோடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ரோடு, மைனர் பங்களா, சின்னையா தெரு, மணிக்கூண்டு, தலையாரி தெரு, தெற்கு காளியம்மன் கோயில் தெரு, அறந்தாங்கி ரோடு முக்கம் வழியாக சென்று சேதுபாவாசத்திரம், ராமேஸ்வரம், தஞ்சாவூர், அறந்தாங்கி, காரைக்குடி, மதுரை, புதுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். 

பெரியதெருவில்  1 ந்தேதி வரை இருசக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த 4 நாட்களும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.