Breaking News
recent

மதவாத அரசியலுக்கு எதிராக மதச்சார்பற்ற முன்னணி தொடக்கம்!

அரசியல் கட்சிகளுக்கு அப்பால், அகில இந்திய அளவில்  மக்களை ஒருங்கிணைக்கும் செயல்திட்டத்துடன் 'மதச்சார்பற்ற அரசியலுக்கான தோழமை முன்னணி' தொடங்கப்பட்டுள்ளதாக
அதன் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். இம்முன்னணியின் தமிழக அறிமுகக் கூட்டம், 24-10-2013 வியாழன் அன்று சென்னையில் சவேரா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
பூரி சங்கராச்சாரியார், ஜம்மியத் உலமா இ ஹிந்த் தலைவர் ஹர்ஷத் மதானி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜோஸ் ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு, தேசிய அளவில் இவ்வமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஒருங்கிணைப்பாளராக அருட்திரு ஜெகத் கஸ்பார் செயல்படுவார் என்றும், மேலும் இக்கூட்டத்தில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை மயிலை மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்திரு ஆண்டனி சாமி, பேராயர் எஸ்றா சற்குணம், இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீபா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பாமா, அருந்தமிழர் இயக்கத் தலைவர் ஜக்கையன், தமிழ் ஆன்றோர் பேரவைத் தலைவர் பத்மநாபன், சமூக ஆர்வலர் அழகரசன் மற்றும் சமூக நல்லிணக்க சிந்தனையாளர்கள், பெரியாரிஸ்டுகள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள், தலித் - இஸ்லாமிய - கிறித்தவ இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
டெல்லியிலிருந்து வருகை தந்திருந்த அமைப்பாளர் ஹர்ஷத் மதானி யின் உரையை, சென்னை மக்கா பள்ளி தலைமை இமாம் சம்சுதீன் காசிமி தமிழில் வழங்கினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.