Breaking News
recent

தஞ்சை மாவட்டத்துக்கு 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை!

தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1028–வது சதய விழா வருகிற 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 11ந் தேதி (திங்கட்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலாக டிசம்பர் மாதம் 7ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் தஞ்சை மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.