அதிராம்பட்டினம் முதல் மல்லிப்பட்டினம், கீழத்தோட்டம், ஏரிப்புறகரை, சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைப்பட்டினம், அம்மணிச்சத்திரம், அடைக்கத்தேவன், செந்தலைப்பட்டினம், மந்திரிப்பட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம் வரையிலான கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் அதிக அளவில் உள்ளன. இவர்கள் விசைப்படகுகள், கண்ணாடி இழை படகுகள், நாட்டுப்படகுகள் போன்றவை மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் புயல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அதிரையில் மீன் கிடைக்க வாய்பில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்