அதிரையில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களை விசாரணைக்கு காவல் நிலையம்வரை அழைப்பதால் ஏற்படும் அசவ்கரியத்தை கருத்தில் கொண்டும் தேவையற்ற கேள்விகளை கேட்டு இழுத்தடித்து வரும் போக்கை கண்டித்து மமக / தமுமுக சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.
போராட்ட அறிவிப்பு வெளியானதை அடுத்து பட்டுகோட்டை DSP அவர்கள் பேச்சு வாரத்தைக்கு அழைத்துள்ளார் அப்பொழுது மேற்காணும் குறைகளை பட்டியலிட்ட மமக வினர் இது குறித்து உடனடி நடவடிக்கை தேவை என கூறினார்.
இதனை கேட்ட DSP விசாரணை அதிகாரியை பட்டுகோட்டைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இனி இது போன்ற தொந்தரவுகள் நிகழாவண்ணம் பார்த்துகொள்வதாக கேட்டுகொண்டதின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நம் கோரிக்கையை ஏற்ற DSP அவர்களுக்கு அதிரைமக்களின் சார்பில் நன்றியை தமுமுகவினர் தெரிவித்து கொண்டனர்.
தகவல்: LMS.அஹமது ஹாஜா.
மா.செ மமக/தமுமுக
நன்றி:அதிரைxpress
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்