Breaking News
recent

அதிரையர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ??? அவசியம் பார்க்கவேண்டிய காணொளி!

 தஞ்சாவூரில் ரமணா திரைப்பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக புகார் அளித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன் இறந்த ரவிச்சந்திரனுக்கு சிகிச்சை அளித்ததாக மகன் குற்றம் சாட்டியுள்ளார். உயிரிழந்த தந்தையின் உடலை வாங்கி செல்ல ரூ-.1 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார். 
போராட்டம் நடத்தினால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார். தம்மை மிரட்டிய மருத்துவர் வாஞ்சிலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை கே.எஸ்.டி.சி. மருத்துவமனையை ரவிச்சந்திரனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். 
நன்றி:தினகரன்

இது, அதிரை மக்களுக்கு ஏன் அதிர்ச்சி தரும் செய்தி?  தஞ்சை கே.எஸ்.டி.சி மருத்துவமனை - மருத்துவர் வாஞ்சிலிங்கம் அவர்களிடம்தான் அதிரை மக்கள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த மருத்துவர் வாஞ்சிலிங்கள் அவர்கள் அதிரையில் படித்தவர் என்பதால் கூடுதல் நம்பிக்கையில் அங்கு செல்கின்றனர். அவர் மீதுதான் இந்த குற்றச்சாட்டுகள்.

மோசடி மூலம் இந்த மருத்துவமனையும் மருத்துவரும் வெளியே தெரிய வந்துள்ளது. 

தெரியாமல் எத்தனை எத்தனை மருத்துவமனைகளும் மருத்துவர்களும்  இதுப் போன்ற மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றனர்..? நினைக்கவே பகீர் என்கிறது...

இனியாவது அதிரை மக்கள் ஷிஃபா மருத்துவனை உள்ளிட்ட அதிரை மருத்துவமனைகளையும் மருத்துவர்களையும் பயன் படுத்திக்கொள்ளவேண்டும்!


Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.