Breaking News
recent

அதிரையில் வாகனங்கள் சோதனை!

அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையங்களில் உள்ள வாகனங்களை கடலோர பாதுகாப்பு குழுமம் ஐ.ஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையம், சேதுபாவாசத்திரம் கடல்ரோ பாதுக்காப்பு காவல்நிலையங்களுக்கு ஜீப்புகள், காவல்நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதிராம்பட்டினம் கடலோர காவல்நிலையம் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை கடலோர பாதுக்காப்பு குழுமம் ஐ.ஜி சொக்கலிங்கம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தனித்தனியாக ஒவ்வொரு வாகனத்தையும் பார்வையிட்டு விளக்குகள், பிரேக் போன்றவை சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
பின்னர் வாகனங்களை ஓட்டச்செய்தும் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட அனை த்து வாகனங்களையும் பாதுகாப்பாகவும், சொந்த வாகனத்தை பாதுக்காப்பது போல் பாதுக்காக்க வேண்டும் என்று கூறினார்.

டி.எஸ்பி பிச்சையா ஆய்வாளர் ஆனந்த் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.