Breaking News
recent

பட்டுக்கோட்டை அருகே கியாஸ் சிலிண்டர் கசிந்து தொழிலாளி கருகி பலி!

தஞ்சை– பட்டுக்கோட்டை சாலை அருகே கடந்த 24–ந்தேதி ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சமையல் செய்வதற்காக தஞ்சை பகுதியை சேர்ந்த சரோஜா (54), மணி (63), ரெங்கராஜ் (67), செல்வராஜ் (56) உட்பட மொத்தம் 15 பேர் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
சமையல் செய்து கொண்டு இருந்த போது திடீரென கியாஸ் கசிந்து தீப் பிடித்தது. இதில் சரோஜா, ரெங்கராஜ், மணி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு நிலைய மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர்கள் காயம் பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சரோஜா, ரெங்கராஜ், மணி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.