Breaking News
recent

முக்கிய அறிவிப்பு: அதிரை வாக்காளர் பெயர் சேர்ப்பு!

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுப்பையன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், பெயர் விடுபட்டவர்கள், தங்கள் பெயரை சேர்ப்பதற்கு தஞ்சை மாவட்டம் முழுவதிலும் உள்ள 2,056 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. 
பொதுமக்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயர் விடுபட்டிருந்தாலோ, பிழை திருத்தங்கள் இருந்தாலோ, உடனடியாக முறையான படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை 10 தினங்களுக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார். 
அதிரையில்...
அதிரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், பெயர் விடுபட்டவர்கள், தங்கள் பெயரை சேர்ப்பதற்காண முகாம் நாளை அதிரையிலும் நடைபெற உள்ளது. 
இந்த முகாம். கடந்த தேர்தலில் நீங்கள் எங்கு வாக்களித்தீர்களோ அல்லது உங்கள் வார்டு மக்கள் வாக்களித்தார்களோ அந்த வாக்குச் சாவடியில் இந்த முகாம் நடைபெற உள்ளது. 
காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதனை நீங்கள் தவறாதுபயன்படுத்திக்கொள்ளுங்கள்!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என இந்த இணையளம் மூலமாகவும் சரிபார்த்து   http://www.elections.tn.gov.in/eroll/
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.