காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை



மகாராஷ்டிர மாநில காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து, சிறுபான்மை கல்வி கூட்டமைப்பின் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:


முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் சிறப்பு காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்படுவார். இதன் மூலம், முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறை பணியில் சேர மேலும் வாய்ப்புகள் உருவாகும்.


எனவே, முஸ்லிம் இளைஞர்கள் உருது மொழியுடன் மராத்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும். இது, அவர்கள் காவல்துறை பணியில் சேர மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.