தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-வது கட்ட ஓட்டு பதிவு இன்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் தெலுக்கன்குடிகாடு அரசு தொடக்கப்பள்ளியில் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று காலை 8 மணி அளவில் ஓட்டு போட்டார். அதன்பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலிலதாவின் பொற்கால ஆட்சியில் 100 நாளில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலை போலவே உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்