அதிரை அருகே தொழிலாளி மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது!


அதிராமபட்டினம் அருகே உள்ள‌ பள்ளிக்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேஷ், தங்கவேல், கமலக்கண்ணன், கார்த்திக். இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளிகள்.

இவர்கள் அதிராமபட்டினம் தம்பிகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காடுகள், வயல்வெளிகளில் சுற்றிதிரியும் காடை, மான், முயல் போன்ற பல வகையான விலங்குகளையும் பறவைகளையும் துப்பாக்கியால் வேட்டையாடி வருகிறார்கள்.

இவ்வாறு வேட்டையாடுவதற்காக தங்களுடைய லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கியை கணேஷ் என்பவர் எடுத்து அதில் வெடி பொருட்களை நிரப்ப துடைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராமல் தனது கை பிஸ்டல் மீது பட்டுவிட்டது. அதில் இருந்து சீறிப்பாய்ந்த துப்பாக்கி குண்டு எதிரே நின்ற தங்கவேலின் மார்பில் பாய்ந்தது. இதில் மார்பிலிருந்து ரத்தம் வந்த நிலையில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து அதிராமபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி:மாலைமலர்
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.