அதிரைநிருபர் பதிப்பகம் - "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா " நூல் வெளியிட்டது !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

அல்ஹம்துலில்லாஹ் !

இன்று (09-டிசம்பர்-2012) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்புடனும் எளிமையாகவும் நிறைவுற்றது.

எங்கள் அன்பான அழைப்பிற்கு ஆதரவு தந்து வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

நிகழ்வு சிறப்புடன் துவங்கியது, அதிரை தாரூத் தவ்ஹீத் அமீர் அதிரை அஹ்மது B.A., அவர்கள் தலைமை தாங்கினார்கள் அதனைத் தொடர்ந்து, வரவேற்புரை சகோதரர் M. தாஜுதீன் M.B.A., நூல் அறிமுக உரை சகோதரர் தீன்முகமது B.Sc .B.G.L., நிகழ்த்தினார்கள்.

அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் சகோதரர் ஜமீல் M.ஸாலிஹ் அவர்கள் முதல் பிரதியை வெளியிட அதனை சகோதரர் எஸ். முகமது பாரூக் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

வாழ்த்துரையை சகோதரர்கள் M.L. அஷ்ரப் அலி M.A.B.L மற்றும் அப்துல் முனாஃப் B.A.B.L., வழங்கினார்கள்

நிகழ்வின் நிறைவாக நூல் ஆசிரியர் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி M.Com., அவர்கள் தனது ஏற்புரையுடன் நன்றியுரை வழங்கினார்கள், இது ஒரு நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது.

மேலும் விபரங்கள் விரைவில்....

நூல் வெளியீட்டு நிகழ்வு புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக.









அதிரைநிருபர் பதிப்பகம்
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.