சவூதியில் கத்தியால் குத்தப்பட்ட அதிரை வாலிபர்

சில தினங்களுக்கு முன் இஷாத் தொழுகைக்காக ஜித்தா எஸ்கான் பில்டிங் ஷரபியா வழியாகச்சென்று கொண்டிருந்த முஸ்தபா மீராஷா -அதிரை-காழியார் தெரு -சகோதரரை இரண்டு ஆப்ரிக்க மொபைல் திருடர்கள் அடித்து பணத்தை பறித்துள்ளனர், இகாமா மற்றும் உடைமைகளை சூரையாட முயற்சிக்கையில் போராடியவரை இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

கூடயிருந்த ஷம்சுத்தீன் என்ற மலையாளச் சகோதரரை நெஞ்சு அடிவயிறு போன்ற ஆறு இடங்களில் குத்திக் கீறியுள்ளனர்.




இந்தத் துயரச் சம்பவம் நடந்து சில மணிநேரங்களில் மலையாளச் சகோதரனைக் காண அந்த இரவிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மலையாளிகள் மருத்துவமனையில் ஆஜர் ?!

நம் தமிழனைக் காண எத்தனைபேர் .... (....தமிழா......தமிழா! ?) மேலும் கைரளி , ஏசியாநெட் மற்றும் மீடியாக்கள் கேமரா சகிதம் அல்லாண்டு வந்து இறங்கியாச்சு. "சாராயிட்டு ஈ பில்லையறு பரிச்சயம் உண்டில்லே?- வளர நன்னியானு" என்று எம்மை குசலம் வேறு விசாரிப்பு.

மருத்துவமனை டைரக்டரிடம் சிறப்பு கவனத்திற்கு வேண்டியதல்லாமல்
நேற்று நம் அய்டா அமைப்பின் சகோதரர்கள் நலம் விசாரித்து வந்தனர்.
அவர்கள் விரைந்து நலம்பெற்று வீடு திரும்ப அனைவரும் துஆ செய்வோமாக.

புகைப்படம் மற்றும் செய்தி: சகோ.ராஃபியா-ஜித்தா
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.